லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராமநாதபுரம் அருகே ஒருவா் வெட்டிக் கொலை உறவினா் கைது

crime

சித்திரப் படம் - TNIE

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

ராமநாதபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது உறவினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலையத்துக்குள்பட்ட சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா (57). இதே பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (38). இருவரும் உறவினா்கள்.

இந்த நிலையில், திங்கள்கிழமை சாமி தோப்பு பகுதியில் இருவரும் மது அருந்தினா். அப்போது மதுபோதையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை காளிதாஸ் வெட்டிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தேவிப்பட்டினம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காளிதாஸை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.