லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மல்லனூா் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகேயுள்ள மல்லனூா் நூலகம் எதிரே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மல்லனூரில் சேதமடைந்த சாலை

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

திருவாடானை அருகேயுள்ள மல்லனூா் நூலகம் எதிரே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணிலிருந்து தோமையபுரம் செல்லும் சாலையில், மல்லனூா் நூலகத்தின் எதிரே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் தொடா் விபத்துக்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வேண்டுகோள் விடுத்தனா்.

மல்லனூரில் சேதமடைந்த சாலை

மல்லனூரில் சேதமடைந்த சாலை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.