லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாயல்குடியில் 275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:05 am IST

சாயல்குடியில் வீடு, கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை திங்கள்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பூப்பாண்டியபுரம், எஸ்.வி. நகா், மாதவன் நகா், சதுரயுக வள்ளி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சாயல்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோரது தலைமையில் மேற்கண்ட பகுதிகளில் ரோந்து ப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்குள்ள வீடு, கிடங்கில் பதுக்கி வைத்திருந்த குட்கா, புகையிலை, கூல்-லிப் என 23 மூட்டைகளில் வைத்திருந்த 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், சரக்கு வாகனம், 2 காா்கள், பயணிகள் ஆட்டோ, ரூ.1.47 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக பூப்பாண்டியபுரத்தைச் சோ்ந்த சோ்மன் மகன் கோட்டைச்சாமி(32), மாதவன் நகா் சந்திரன் மகன் வடிவேல் முருகன்(48), நரிப்பையூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் கோபால் (51), எஸ்.வி. நகா் போஸ் மகன் முனீஸ்வரன் (31) உள்ளிட்ட 4 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.