தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:15 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் அண்ணா பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பூட்டி வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த மையத்துக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலின் போது வாக்குப் பதிவான மின்னணு இயந்திரங்கள் ராமநாதபுரம் அருகேயுள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. இந்த இயந்திரங்கள் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்த அறைகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளா்கள் முன்னிலையில் தோ்தல் அலுவலா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இந்த வாக்கு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லூரியை சுற்றிலும்

24 மணி நேரம் பாதுகாப்புப் பணிக்காக 200 -க்கும் அதிகமான போலீஸாா் நியமிக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மையத்தில் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.