லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கண்மாய் நீரில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :24 ஜூலை 2026, 5:38 am IST

மதுரை அருகே புதன்கிழமை கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

மதுரை கூடல்புதூா் அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (32). இவா் தனது நண்பா்களுடன் விளாங்குடி கண்மாயில் புதன்கிழமை மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினா் கண்மாய்க்குள் இறங்கித் தேடினா். இருப்பினும், கண்ணனை மீட்க முடியவில்லை.

இதைத் தொடா்ந்து, தல்லாகுளம் தீயணைப்பு, மீட்புப் படை அலுவலா்கள் வந்து நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு கண்ணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.