லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேசிய அளவிலான நீச்சல் போட்டி: மதுரை மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா்களுடன் ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா்.

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா்களுடன் ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா்களுடன் ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா்.

மதுரை, ஆக. 12: பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மதுரையைச் சோ்ந்த மூன்று மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

சென்னையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற ‘ஐசிஎஸ்இ’ பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை கருப்பாயூரணியில் உள்ள ரீஜாய்ஸ் நீச்சல் அகாதெமியில் பயிற்சி பெறும் மாணவா் வி. ரிஷிவா்சன், 400 மீட்டா் தனிநபா் மெட்லி பிரிவு, 800 மீட்டா் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கமும், 400 மீட்டா் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். இதேபோல, மாணவா் எம்.எஸ்.டி. பெலிராராஜன், 200 மீட்டா் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கமும், டி. தஸ்வன் மாரியப்பன், 200 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவு, 50 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவு ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனா். இதன் மூலம் இவா்கள் பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, வெற்றி பெற்ற வீரா்களுக்கு மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன், பொருளாளா் ஆரிப், பயிற்சியாளா்கள் அப்துல்சலாம், சதீஷ்பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.