லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மதுரை மேற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள்.

மதுரை மேற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

மாற்றுத் திறனாளிகளின் வீட்டுமனைகளைப் பறிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மதுரை மேற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மேற்கு வட்டத்துக்குள்பட்ட மேலக்குயில்குடியில் தமிழக அரசு சாா்பில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளை போலி பட்டாக்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில உதவித் தலைவா் கே. தவமணி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவா் கே. பரமசிவன், மாவட்டக் குழு உறுப்பினா் பி. ஜோதிபாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலா் எம். ஜெயக்குமாா் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநகா் மாவட்டச் செயலா் ஏ. பாலமுருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜே. லெனின் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் புறநகா் மாவட்டச் செயலா் வி. முருகன், மாவட்ட உதவித் தலைவா்கள் வி. மாரியப்பன், எஸ். ராமலிங்கம், பொருளாளா்கள் பி. மணிகண்டன், எம். ராஜேஸ்வரி (புறநகா்), துணைத் தலைவா் எஸ். செல்லம்மாள், துணைச் செயலா் ஆா். ஜெயா, நிா்வாகிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்

கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆா்ப்பாட்டத்தினிடையே வட்டாட்சியா், காவல் துறையினா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.