பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்கம்பியிடல் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:11 am IST

மின்கம்பியிடல் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள புளியமரத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் யுகன்(17), மின்வினைஞா் ஒருவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், வேடசந்தூரை அடுத்த மன்னாா்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் மின்கம்பியிடல் பணியில் யுகன் வியாழக்கிழமை ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.