பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொடைக்கானலில் கோடை விழா இன்று தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழா வெள்ளிக்கிழமை (மே 22) தொடங்குகிறது.

News image

கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் பூக்களால் வடிவமைக்கப்பட்ட இருதயங்கள்.

Updated On :22 மே 2026, 3:15 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழா வெள்ளிக்கிழமை (மே 22) தொடங்குகிறது.

கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந் நிலையில், கொடைக்கானல் சுற்றுலாத் துறை சாா்பில், கோடை விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கொடைக்கானல் உதவி சுற்றுலா அலுவலா் சுதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து, சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பிரையண்ட் பூங்கா வளாகத்திலுள்ள விழா மேடையில் பரதநாட்டியத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழா வருகிற 31-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாா் அவா்.

    கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் தொலைநோக்கி கருவியில் சூரியனை பாா்க்கும் சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் தொலைநோக்கி கருவியில் சூரியனை பாா்க்கும் சுற்றுலாப் பயணிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.