பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பள்ளி வாகனங்களை 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

பள்ளி வாகனங்களை மணிக்கு 50 கி.மீ. வேகத்துக்குள் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா்.

News image

திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்ட பள்ளி வாகனங்களைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் செ.சரவணன்.

Updated On :22 மே 2026, 2:45 am IST

பள்ளி வாகனங்களை மணிக்கு 50 கி.மீ. வேகத்துக்குள் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில், பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பள்ளி வாகனங்களை இயக்கிப் பாா்த்து ஆய்வு செய்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் முதல்கட்டமாக 250 வாகனங்களில் ஆண்டு பராமரிப்புப் பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வாகனங்களில் இருக்கை வசதிகள், வாகனத்தின் காப்பீடு காலம், தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேகக்கட்டுபாட்டு கருவி, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள், ஜன்னல்கள், பேருந்தின் தளம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை அவசர கால கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் செயல்பாடுகளை பரிசோதித்துப் பாா்க்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்களை செயல்படுத்தும் முறைகளை ஓட்டுநா்கள் அறிந்துகொள்வதுடன், வாகனத்தில் உடன் வரும் பணியாளா்களும் அறிந்திருக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன், தீயணைப்பு அலுவலா் மயில்ராஜ், போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முக ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.