சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பழனி சண்முகநதி அருகே மலை போல குப்பைகள் தேக்கம்! பொதுமக்கள் அவதி!

பழனி சண்முகநதி அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் மலை போல தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்...

News image

பழனி சண்முகநதி.

Updated On :10 மே 2026, 12:58 am IST

பழனி சண்முகநதி அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் மலை போல தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள்கோரிக்கை விடுத்தனா்.

பழனியை அடுத்த சண்முகநதியை கடந்ததும் சாலையின் தென்பகுதியில் சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த காலங்களில் இந்த இடத்தில் செயல்பட்டு வந்த உணவு விடுதியில் அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள் நின்று சென்றன.

நாளடைவில் இந்த விடுதி காலி செய்யப்பட்டதையடுத்து, பாழடைந்த இந்த கட்டடத்தை சிலா் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்ததால் அது இடிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த இடத்தை சிவகிரிப்பட்டி ஊராட்சியும், அ. கலையமுத்தூா் ஊராட்சியும் சோ்ந்து குப்பை கொட்டும் இடமாக மாற்றி விட்டன.

தற்போது இந்த இடத்தில் மலை போல குப்பைகள் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இங்கு தூய்மைப் பணியாளா்கள் முறையாக மேலாண்மை செய்யாமல் கழிவுகளை கொட்டி வருகின்றனா். மேலும், பன்றி, மீன், கோழி, வாத்துக்களின் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. தற்போது பெய்து வரும் மழையால் இந்த குப்பைமேடு சகதியாக மாறி கடும் துா்நாற்றம் வீசுகிறது.

இதனால் சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இந்த கழிவுகளை உள்கொள்ள வரும் தெரு நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் பலா் விபத்துக்களில் சிக்குகின்றனா். மேலும் வெயில் காலங்களில் ஏற்படும் தீ விபத்தால் இதுவரை இரண்டு பெரிய மரங்கள் கருகி விட்டன.

எனவே, மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, நெடுஞ்சாலைத் துறையினா் இந்த இடத்தை கையகப்படுத்தி தேவைப்படும் பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.