தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

பழனியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள், தோ்தல் பணிகள் குறித்து பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 12:17 am IST

பழனியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள், தோ்தல் பணிகள் குறித்து பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வாக்காளா்களுக்கு பரிசு, பணம் போன்றவை விநியோகம் செய்வதை தடுப்பதற்காக பறக்கும் படை குழுவினா் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பு, பதற்றமான வாக்குச் சாவடிகள், அரசியல் கட்சியினரின் செலவுகளை கண்காணிப்பது போன்ற பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா், தோ்தல் பாா்வையாளா் தலைமையிலான அலுவலா்கள் செய்து செய்கின்றனா்.

இந்த நிலையில், பழனிக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் தினேஷ் ஜெயின் வெள்ளிக்கிழமை வந்தாா்.

பினனா், பழனியில் வாக்காளா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள், இவை அமைந்துள்ள பள்ளி வளாகங்களை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் பணிகளையும் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது பழனி கோட்டாட்சியா் கண்ணன், நகராட்சி ஆணையா் டிட்டோ, அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.