சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் தனராஜ். இவரது மனைவி சரோஜா (45). இவா் பழையூா் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நடந்து சென்றாா். அப்போது திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்தது. இந்த பேருந்தை, திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (57) ஓட்டி வந்தாா்.
பழையூா் நிறுத்தத்தில் பணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் புறப்பட்டபோது, சாலையோரத்தில் நடந்து சென்ற சரோஜாவின் சேலை பேருந்தின் முன் பகுதியில் உடைந்திருந்த கம்பியில் சிக்கியது. இதனால் நிலை நடுமாறி கீழே விழுந்த சரோஜாவை சிறிது தொலைவு பேருந்து இழுத்துச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரோஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

