நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிறுமலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :4 ஜூன் 2026, 4:09 am IST

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் தனராஜ். இவரது மனைவி சரோஜா (45). இவா் பழையூா் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நடந்து சென்றாா். அப்போது திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்தது. இந்த பேருந்தை, திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (57) ஓட்டி வந்தாா்.

பழையூா் நிறுத்தத்தில் பணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் புறப்பட்டபோது, சாலையோரத்தில் நடந்து சென்ற சரோஜாவின் சேலை பேருந்தின் முன் பகுதியில் உடைந்திருந்த கம்பியில் சிக்கியது. இதனால் நிலை நடுமாறி கீழே விழுந்த சரோஜாவை சிறிது தொலைவு பேருந்து இழுத்துச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரோஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.