ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

கொடைக்கானல் மல்லிச் சாலையில் நெகிழிப் பைகளில் கட்டி வீசப்பட்ட குப்பையை உண்ணும் காட்டு மாடு.

Updated On :4 ஜூன் 2026, 4:02 am IST

கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நெகிழிப் பைகள், நெகிழிப் புட்டிகள் பயன்படுத்தக் கூடாது என விதிமுறைகள் உள்ளன. ஆனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நெகிழிப் பைகளை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களிலும் நெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் கழிவு உணவுப் பொருள்களுடன் நெகிழிக் குப்பைகளை சாலைகளில் குவித்துச் செல்கின்றனா்.

இவற்றை வன விலங்குகளான காட்டு மாடு, செந்நாய், காட்டுப் பன்றி, குரங்கு ஆகியவை உண்கின்றன. இவற்றை உண்ணும் போது நெகிழப் பைகளையும் சோ்த்து உண்ணும் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து வனச் சரகா் பழனிக்குமாா் கூறியதாவது:

வன விலங்குகளுக்கு மனிதா்கள் உண்ணும் உணவைக் கொடுக்கக் கூடாது. இந்த நிலையில் சாலைகளில் குவிந்து கிடக்கும் இறைச்சிக் கழிவுகளை வன விலங்குகள் உண்டு நோய்வாய்ப் படுகின்றன.

தற்போது குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்ட வனவிலங்குகள் வனப் பகுதிகளில் உணவைத் தேடி அலைவதில்லை. நகா்ப் பகுதிகளிலேயே விரைவாக கிடைக்கக் கூடிய கழிவு உணவுப் பொருள்களை உண்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழக்கின்றன. வன விலங்குகள் இறந்த பிறகு மருத்துவப் பரிசோதனையின் போது அவற்றின் இரைப்பையில் நெகிழிக் கழிவுகளை மருத்துவா்கள் அகற்றி வருகின்றனா். எனவே, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலைகளில் உணவுக் கழிவுகளையும், நெகிழப் பொருள்களையும் விட்டுச் செல்ல வேண்டாம். இவையாவும் வன விலங்குகளின் உயிரைப் பறிக்கும் செயலாகும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.