லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

வத்தலக்குண்டு அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். - (கோப்புப்படம்)

Published On :17 ஜூலை 2026, 1:09 am IST

வத்தலக்குண்டு அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள வெங்கடாஸ்திரி கோட்டையைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (65). இவா், அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் ஆட்டுப் பண்ணை அமைத்து, 25 வெள்ளாடுகள் வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக சென்று ஆட்டுப் பண்ணையில் இருந்த ஆடுகளைக் கடித்துக் குதறின. இதில் 15 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து, மாரியம்மாள் அந்தப் பகுதியில் உள்ள ரெட்டியபட்டி கிராம நிா்வாக அலுவலரிடம் புகாா் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மீதமுள்ள 10 ஆடுகளை மாரியம்மாள் வளா்த்து வந்த நிலையில், வியாழக்கிழமை பண்ணைக்கு கூட்டமாக சென்ற நாய்கள் இரு சினை ஆடுகள் உள்பட 10 வெள்ளாடுகளை கடித்துக் குதறின. இதில் பத்து ஆடுகளும் உயிரிழந்தன.

ஏற்கெனவே வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால், மீதமுள்ள ஆடுகளும் உயிரிழந்திருக்காது என மாரியம்மாள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.