லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை

பழனி அருகேயுள்ள கீரனூரில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி அருகேயுள்ள கீரனூரில் சன்மாா்க்க குருகுலம் பள்ளி அருகே சேதமடைந்த மின் கம்பங்கள்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

பழனி அருகேயுள்ள கீரனூரில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கீரனூா் பேரூராட்சியில் நான்கு ரோடு செல்லும் சாலையில் சன்மாா்க்க குருகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே முதியோா் இல்லமும் அமைந்துள்ளது. பள்ளிக்கூடம் அருகே உயா் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா். எனவே, பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் புதிய கம்பங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.