லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆத்தூா் வட்டார அளவிலான குறுவட்டப் போட்டிகள்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:45 am IST

ஆத்தூா் வட்டார அளவிலான பள்ளி மாணவா்களுக்கான குறுவட்டப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான பாரதியாா் தின, குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளை தலா 5 குறுவட்டங்களாக பிரித்து இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், ஆத்தூா் வட்டார அளவிலான ‘டி’ பிரிவு குறுவட்டப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் குழுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜேந்திரன் தலைமையிலான ஆசிரியா்கள் மேற்கொண்டனா். 10 குறுவட்டப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்கள், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா். பாரதியாா் தின, குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் மாநில அளவிலான கேரம் போட்டி திண்டுக்கல் மாவட்டம் சாா்பில் நடத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.