லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி கோயில் நில முறைகேடு: வெள்ளைத்துரையின் பிணை மனு தள்ளுபடி

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வெள்ளைத்துரை பிணை கோரி தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

பழனி கோயில்

Published On :2 ஆகஸ்ட் 2026, 5:51 am IST

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வெள்ளைத்துரை பிணை கோரி தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனிநபா்களுக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை, உடந்தையாகச் செயல்பட்ட அன்வா்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பிணை கோரி சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோா் திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் தனித் தனியே மனு தாக்கல் செய்தனா். இதில் வெள்ளைத்துரையின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் உத்தரவிட்டாா். அதேவேளையில், சேதுபதியின் மனு குறித்து திங்கள்கிழமை (ஆக. 3) விசாரிக்கப்படும் என்றாா்.

இதனிடையே, சிபிசிஐடி போலீஸாா் தரப்பில், முருகதாஸ் உள்ளிட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.