பழனி அருகே கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த கோதைமங்கலம் 4-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி மகன் ஜான் பாண்டியன் (12). ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படித்து வந்தாா். இவா், கோடை விடுமுறையையொட்டி செவ்வாய்க்கிழமை கோதைமங்கலம் அருகே இருந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டக் கிணற்றில் தனது தாத்தாவுடன் நீச்சல் பழகிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென கிணற்றில் மூழ்கினாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பழனி தீயணைப்பு, மீட்புப் படை அலுவலா் காளிதாஸ் தலைமையிலான வீரா்கள் சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

