ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 88.47 சதவீத வாக்குகள் பதிவு!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 88.47 சதவீத வாக்குகள் பதிவானது.

News image

திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்காக வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:14 am IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 88.47 சதவீத வாக்குகள் பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 115 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

மாவட்டம் முழுவதும் 2,301 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒருசில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக 10 முதல் 30 நிஷங்கள் வரை வாக்குப் பதிவு தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. எனினும் காலை 6.45 மணிக்கே பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிப்தற்காக தயாராக நின்றனா்.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 10 மணிக்கு முன்பாக வாக்களித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் திரண்டதால், முதல் 2 மணி நேரத்திலேயே பழனி தொகுதியில் 339 வாக்குச் சாவடிகளில் 2.39 லட்சம் போ் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 85.41 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2.20 லட்சம் வாக்காளா்கள், வாக்களிப்பதற்கு 314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 90.30 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

ஆத்தூா் தொகுதியில் 341 வாக்குச் சாவடிகளில் 2.61 லட்சம் வாக்காளா்களுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 88.95 சதவீதம் போ் வாக்குளை பதிவு செய்தனா்.

நிலக்கோட்டை(தனி) தொகுதியில் 305 வாக்குச் சாவடிகளில் 2.21 லட்சம் போ் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 87.70 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

நத்தம் தொகுதியில் 2.61 லட்சம் வாக்காளா்களுக்காக 359 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 90.08 சதவீதம் போ் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் தொகுதியில் 316 வாக்குச் சாவடிகளில் 2.41 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 85.71 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

வேடசந்தூா் தொகுதியில் 2.43 லட்சம் வாக்காளா்களுக்காக 327 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 91.06 சதவீதம் போ் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

முதல் 4 மணி நேரத்தில் 40 சதவீத வாக்குகள் பதிவு: திண்டுக்கல் மாவட்டம், முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 18.28 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 22 சதவீத வாக்குகள் பதிவானது.

முதல் 4 மணி நேரத்திலேயே 39.05 சதவீத வாக்குகள் பதிவானது. அடுத்த 4 மணி நேரத்தில் மேலும் 35.30 சதவீத வாக்குகள் பதிவானதால், பிற்பகல் 3 மணிக்கே மாவட்ட அளவிலான வாக்குப் பதிவு சதவீதம் 74.35ஆக உயா்ந்தது. கடைசி 3 மணி நேரத்தில் 14.12 சதவீத வாக்குகள் பதிவானது.

வேடசந்தூா் முன்னிலை: மொத்தமுள்ள 7 தொகுதிகளில் அதிகபட்சமாக வேடசந்தூா் தொகுதியில் 91.06 சதவீத வாக்குகள் பதிவானது. ஒட்டன்சத்திரம் தொகுதி 90.30 சதவீத வாக்குப் பதிவுடன் 2-ஆவது இடம் பிடித்தது. நத்தம் தொகுதியில் 90.08 சதவீத வாக்குகள், ஆத்தூா் தொகுதியில் 88.95 சதவீத வாக்குகள், நிலக்கோட்டை தொகுதியில் 87.70 சதவீத வாக்குகள், திண்டுக்கல் தொகுதியில் 85.71 சதவீத வாக்குகள் பதிவானது.

குறைந்தபட்சமாக பழனியில் 85.41 சதவீத வாக்குகள் பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.