திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2,301 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 16.89 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். மொத்தம் 2301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபேட் கருவி உள்ளிட்டவை, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு,
7 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கு தயாா் நிலையில் இருந்தன.
இந்த நிலையில், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகள், வேன்களில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
12 வாக்குச்சாவடிகள் ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்டவை ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
முழுமையான கண்காணிப்பு: இதுவரை பதற்றமான வாக்குச் சாவடிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு முழுவதும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல் முறையாக 2,301 வாக்குச் சாவடிகளிலும் தலா 2 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, மாவட்ட தோ்தல் அலுவலா், தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலா் ஆகியோா் நேரடியாகப் பாா்வையிட முடியும்.
அதே நேரத்தில் இணையத் தொடா்பு இல்லாத மலை கிராமங்களில், வாக்குப் பதிவு தொடக்கம் முதல் முடிவடையும் வரை முழுமையாக விடியோ எடுத்து, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொகுதிகளுக்கு 22 முதல் 26 சுற்றுகளில் முடிவுகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 80.43 சதவீதம் வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்!

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

