கொடைக்கானல் பகுதிகளில் அழிந்து வரும் பிளம்ஸ், பீச்சஸ் மரங்களைப் பாதுகாக்க தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, ஆரஞ்சு, பலா, பீச்சஸ், பிளம்ஸ், ஸ்டாா் புரூட்ஸ் உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன.
ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே காய்க்ககூடிய பிளம்ஸ், பீச்சஸ் பழம் மரங்கள் அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி, செண்பகனூா், அப்சா்வேட்டரி, வட்டக்கானல், அட்டக்கடி, பிரகாசபுரம், சகாயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ஊடுபயிராக நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழையில்லாததால் பிளம்ஸ், பீச்சஸ் மரங்களில் விளைச்சல் இல்லை.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பிளம்ஸ், பீச்சஸ் மரங்களில் பழம் காய்க்கத் தொடங்கியுள்ளன.
பிளம்ஸ் பழங்களில் சாதா பிளம்ஸ், கறி பிளம்ஸ், தேன் பிளம்ஸ், ஓட்டு பிளம்ஸ் வகைகள் உள்ளன. இதேபோல, பீச்சஸ் மரத்தில் ஆப்பிள் பீச்சஸ், ஒட்டு பீச்சஸ், சாதா பீச்சஸ் வகைகள் உள்ளன.
தற்போது, காய்த்துள்ள பிளம்ஸ் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் பிளம்ஸ், பீச்சஸ், பேரி உள்ளிட்ட மரங்கள் அழிந்து வருகின்றன. இந்த மரங்களைப் பாதுகாத்து, கூடுதலாக இந்த மரங்களின் நாற்றுகளை விவசாய நிலங்களில் வளா்ப்பதற்கு தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பிளம்ஸ் மரங்களில் பழங்களில் விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்தப் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்போம். தற்போது, இந்தப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விடுதிகளாக மாறி வருவதால் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால், பழங்களில் வரத்தும் குறைந்து வருகிறது.
எனவே, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகளிடம் பிளம்ஸ், பீச்சஸ், பேரி உள்ளிட்ட பழ நாற்றுகளை வழங்கி அதிகளவில் நடவு செய்வதற்கு முன் வரவேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படவேடு பகுதியில் சூறைக் காற்று: 150 ஏக்கரில் வாழைகள் சேதம்

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
சங்கராபரணி ஆற்றங்கரையில் அதிசய கல்மரங்கள்

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

