தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பிரசாரம்

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவு கேட்டு நடிகை ரோகிணி பிரசாரம் செய்தாா்.

News image

நடிகை ரோகிணி - இன்ஸ்டாகிராம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:35 am IST

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவு கேட்டு நடிகை ரோகிணி பிரசாரம் செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திமுக கூட்டணிக் கட்சியின் சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக நகரச்செயலா் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் பலா் பேசினா்.

இதனைத் தொடா்ந்து திரைப்பட நடிகை ரோகிணி பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் பல்வேறு மகளிா் நலத் திட்டங்களைத் தந்துள்ளாா். எனவே, 2026 தோ்தலிலும் தமிழக முதல்வராக ஸ்டாலின்தான் வருவாா். தொடா்ந்து அவா் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவாா் என்றாா் அவா்.

கூட்டத்தில் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா். தொடா்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் நடிகை ரோகிணி கலந்துகொண்டு வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவுகேட்டு வாக்கு சேகரித்து பேசினாா். இந் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.