தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

News image

கொடைக்கானல் கூக்கால் அருகே மரம் முறிந்து விழுந்ததால் சேதமடைந்த காா், மின் கம்பம்.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:26 am IST

கொடைக்கானல் கூக்கால் பகுதியில் திங்கள்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதி முனீஸ்வரன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்தப் பகுதியில் ஆபத்தான நிலையில் பழைமையான யூக்காலி மரம் இருந்தது. இந்த மரம் முறிந்து விழுந்ததில் அங்கிருந்த இரண்டு மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.

இதனால் கூக்கால்- பழம்புத்தூா் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் முறிந்து விழுந்த மரத்தை அகற்றினா். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மின்தடையால் கிராம மக்கள் அவதி: மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் கூக்கால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.