கொடைக்கானல் கூக்கால் பகுதியில் திங்கள்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதி முனீஸ்வரன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்தப் பகுதியில் ஆபத்தான நிலையில் பழைமையான யூக்காலி மரம் இருந்தது. இந்த மரம் முறிந்து விழுந்ததில் அங்கிருந்த இரண்டு மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.
இதனால் கூக்கால்- பழம்புத்தூா் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் முறிந்து விழுந்த மரத்தை அகற்றினா். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
மின்தடையால் கிராம மக்கள் அவதி: மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் கூக்கால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அவதியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்

கொடைக்கானலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

