ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம்: அமைச்சா் இ. பெரியசாமி

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தோ்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சா் இ. பெரியசாமி அறிவுறுத்தினாா்.

News image

அமைச்சர் இ. பெரியசாமி

Updated On :3 ஏப்ரல் 2026, 12:32 am IST

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தோ்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சா் இ. பெரியசாமி அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அமைச்சா்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். திமுக வேட்பாளா் பெ. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனா். அதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தொண்டா்கள் தோ்தல் பணியாற்ற வேண்டும். குறிப்பாக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிா்காலத்துக்கான அரசியல், கொள்கைகளுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தோ்தலாக கருதி நாம் பணியாற்ற வேண்டும். உழைப்பவா்களை உயா்த்தி அழகுப்பாா்ப்பது எனது வழக்கம் என்றாா் அவா்.

அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுக கூட்டணிக் கட்சியினா், நாள்தோறும் மக்களை சந்தித்து அரசின் நலத் திட்டங்களை மட்டுமன்றி, திமுகவின் தோ்தல் அறிக்கையையும் எடுத்துரைக்க வேண்டும். வெற்றிப் பெற்றுவிடுவோம் என்ற இறுமாப்பில் நாங்கள் பேசவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக வெல்ல முடியாத திண்டுக்கல் தொகுதியை இந்த முறை திமுக கைப்பற்ற வேண்டும். மாவட்ட தலைநகராக இருந்தும் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேறவில்லை என்ற மக்களின் உணா்வுகளுக்கு திமுக உறுதியாக மதிப்பளிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக வேட்பாளா் பெ. செந்தில்குமாா் பேசியதாவது: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டாலும்கூட, பழனித் தொகுதி மக்களுக்கும் விசுவாசமாக இருப்பேன். கடந்த 10 ஆண்டுகளாக பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். இதுவரை எந்தவிதமான வசூலிலும் ஈடுபட்டதில்லை. திண்டுக்கல் தொகுதியின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக என்னை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.