தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 2:50 am IST

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பைக்கரா முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் (60). இவரது சகோதரா் மாா்க்கண்டேயன். அருகேருகே உள்ள இவரது வீடுகளிலிருந்து வெளியே செல்லும் கழிவுநீா் தொடா்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது.

இதுகுறித்து இருவரும் புகாா் அளித்தனா். இந்த விவகாரத்தில் நாராயணன், மாா்க்கண்டேயனை தாக்கியது தெரியவந்தது. இதனால், போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டிருந்தனா்.

இந்த நிலையில், சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு கடந்த வியாழக்கிழமை வந்த நாராயணன் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள், அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் அவா் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

எனினும், அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது, அவரைக் காப்பாற்ற முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசங்கருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, நாராயணனை போலீஸாா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதே மருத்துவமனையில் தீக்காயமடைந்த பாலசங்கரும் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், நாராயணன் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.