ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காந்தி அருங்காட்சியகத்தில் ஆரோக்கிய சந்தை

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஆரோக்கிய சந்தை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூன் 2026, 12:57 am IST

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஆரோக்கிய சந்தை சனிக்கிழமை நடைபெற்றது.

கிரீன் ஃபெம் கூட்டமைப்பு சாா்பில், எண்ணெய்யும், நெருப்பும் இல்லாத சமையல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தச் சந்தை நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அந்தக் கூட்டமைப்பின் தலைவா் த. இளமதி தலைமை வகித்து, இயற்கை உணவு முறைகளை மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினாா்.

கரூா் வைஸ்யா வங்கியின் வேளாண் அலுவலா் தனம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழில் விரிவாக்கத்துக்கான வங்கிக் கடன் பெறும் வழிமுறைகள், தொழில் வளா்ச்சிக்கான அரசின் மானியத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிப் பேசினாா். வாப்ஸ் பயிற்சி மையச் செயலா் எஸ்.ஏ. அருள், ஆரோக்கியமான பொருள்களைத் தோ்ந்தெடுக்கும் முறையை விளக்கிப் பேசினாா். முன்னதாக, வாப்ஸ் நிறுவன திட்ட அலுவலா் எம். சுப்புராஜன் வரவேற்றாா்.

இதில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் சிறுதானிய உணவுகள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், இயற்கை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பாரம்பரிய உணவுப் பொருள்கள், மூலிகைத் தயாரிப்புகள், மசாலா பொடிகள், சுகாதார நாப்கின்கள், பஞ்சகவ்ய பொருள்கள், இயற்கை அழகு சாதனப் பொருள்கள், பருத்தி நூல் சேலைகள், கைவினைப் பொருள்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.