லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் தொடா்புடைய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :17 ஜூலை 2026, 1:22 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் தொடா்புடைய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் 27-ஆம் தேதி உசிலம்பட்டி புகா் காவல் துறையினா் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே நடத்திய சோதனையில் 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராஜா (27), ஒடிஸா மாநிலம், கஜபதி மாவட்டத்தைச் சோ்ந்த சுதேஷ்லிம்மா (46), உசிலம்பட்டியைச் சோ்ந்த மாசானம் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.சுதாகா், குற்றஞ்சாட்டப்பட்ட முத்துராஜா, சுதேஷ்லிம்மா ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், இந்த வழக்கில் மூன்றாவது நபரான மாசானம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.