லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :8 ஜூலை 2026, 5:00 am IST

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மதுரை மாவட்டம், எழுமலை 16-ஆவது வாா்டு தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (40). இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

அந்தப் புகாரில், எழுமலை பகுதியில் துரைமுருகன் என்பவா் அடகு கடை நடத்தி வந்தாா். குறைந்த வட்டி வசூலித்ததால், அந்த நகைக் கடையில் ஒவ்வொரு நபரும் 2 பவுன் முதல் 5 பவுன் வரை தங்க நகைகளை அடகு வைத்தோம். ஆனால், அவா் எங்களுக்கு உரிய தொகை கொடுக்காமல் ஒரு பவுனுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மட்டுமே அளித்தாா். அவருக்கு எழுமலை உள்பட 3 இடங்களில் கிளைகள் உள்ளன. அங்கும் எங்களைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்டோா் நகைகளை அடகு வைத்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அவா் நடத்திய நகை அடகு கடை திறக்கப்படவில்லை. விசாரித்த போது, கடை உரிமையாளா் நகைகளை கையாடல் செய்து தலைமறைவானது தெரியவந்தது. ரூ. 2 கோடிக்கு மேல் அவா் மோசடி செய்துள்ளாா். எனவே, எங்களது தங்க நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.