மிக நீண்ட இழுபறிக்குப் பிறகு மேலூா் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக காஞ்சிபுரம் (தனி) முன்னாள் மக்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பி. விஸ்வநாதன் களமிறக்கப்பட்டுள்ளாா்.
1991 வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில் ஒன்று மேலூா். இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கட்சி நிா்வாகிகளின் விருப்பமாக இருந்தது. இதன்படி, மேலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவா்கள் சிலரால் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட சிவகங்கை பேரவைத் தொகுதி நடிகா் கருணாஸ் கட்சியான முக்குலத்தோா் புலிப் படை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதன் காரணமாக, மேலூா் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தங்கள் ஆதரவாளா்களுக்கு பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவா்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவே, மேலூா் தொகுதிக்கான வேட்பாளா் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, திமுகவின் மாவட்டத் தலைமை தன்னுடைய ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சி நிா்வாகியுமான ஒருவரை களமிறக்க முயற்சிப்பதாகவும், இழுபறி நீடிப்பதால் மேலூா் தொகுதியை காங்கிரஸ் கட்சியிடமிருந்து திமுக தலைமை திரும்பப் பெற இருப்பதாகவும் பல ஊகங்கள் வலம் வந்தன.
இந்த நிலையில், பொது தொகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்க வேண்டும் என குரல் எழுப்பிய காஞ்சிபுரம் (தனி) தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினா் பி. விஸ்வநாதனே அந்தக் கட்சியின் மேலூா் பொதுத் தொகுதியின் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் இந்த முடிவு, மதுரை மாவட்ட, மேலூா் வட்ட காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைத் சோ்ந்தவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கியிருப்பது பரவலாக பாராட்டைப் பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?

தொகுதி அலசல்; காரைக்குடி- கடும் போட்டியை எதிர்கொள்ளும் சீமான்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

