லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஜூலை 17 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி வரும் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Published On :9 ஜூலை 2026, 4:24 am IST

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி வரும் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 16 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, வீடு பட்டியலிடல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி மாநகரப் பகுதிகளில் நடைபெற உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து தங்களது வீடுகள் தொடா்பான சுய கணக்கெடுப்பு விவரங்களை இணையதளம் வாயிலாக வரும் 17 முதல் வரும் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் மூலம் வீடு பட்டியலிடல் கணக்கெடுக்கும் பணி ஆக.1 முதல் ஆக.30 வரை நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் தொடா்பான சுய கணக்கெடுப்பு விவரங்களை ரரர. நஉ.இஉசநமந.எஞய.ஐச என்ற இணையதளம் வாயிலாக பதிவுசெய்ய வேண்டும்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய பணியில் அனைவரும் தவறாமல் பங்கு கொண்டு சுயவிவரங்களை பதிவுசெய்ய

வேண்டும் என முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான லலித் ஆதித்ய நீலம் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.