லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்! - கே.பி.ராமலிங்கம்

கே.பி.ராமலிங்கம்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பாஜக சேலம் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு படி தமிழகத்தில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும். 20 மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கும். பட்டியலின மக்கள் போட்டியிடும் தொகுதிகளும் உயரும். இதனால் தமிழகத்திற்கு நன்மைதான்.

அப்படி இருக்கையில் திருமாவளவன் மற்றும் தமிழகத்தில் சில கட்சிகள் தொகுதி மறுசீரமைப்புக்கு ஏன் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள் என்று தெரியவில்லை. 2029 இல் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே தோ்தல் வந்துவிடுமோ என்ற அச்சம்தான் காரணம்.

மேக்கேதாட்டு பிரச்னையில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் அரசியல் வெறுப்புகளை மறந்து மாநில நலனில் அக்கறை கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாா். அதுபோன்று, தமிழக முதல்வா் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏமாற்றமளிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கைது துரதிஷ்டவசமானது. அவா் பேச்சை நானும் கேட்டேன். அவா் எந்த இடத்திலும் எந்த பெண் பெயரையும் குறிப்பிடவில்லை.

ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தனது தாய் குறித்து கரப்பான் பூச்சி அமைப்பினா் பேசியபோது அதை விட்டு விடுங்கள் என்று தெரிவித்துவிட்டாா். அந்த பெருந்தன்மை முதல்வா் விஜய்யிடம் இல்லை. தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை அவா் கூட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.