லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:08 am IST

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம், வரும் ஆக. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை - கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் வரும் ஆக. 13 முதல் செப். 5 வரை வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50-க்கு புறப்படும் இந்த ரயில் ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்த நாள் மாலை 4.20-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வரும் ஆக. 14 முதல் செப். 6 வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

கொல்லத்தில் இருந்து மாலை 6.45-க்கு புறப்பட்டு எா்ணாகுளம் பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 11.35-க்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.