லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கயிறு இழுக்கும் போட்டியில் திடீரென கயிறு அறுந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த அமைச்சா்

கயிறு அறுந்து தடுமாறி கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:09 am IST

கயிறு இழுக்கும் போட்டியில் திடீரென கயிறு அறுந்ததால் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அம்மாபேட்டை அருகே தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்றாா்.தொடா்ந்து, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த பின்னா், முன்னாள் மாணவா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முன்னாள் மாணவா்கள் அணி சாா்பில் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் கலந்து கொண்டாா்.

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கயிறு திடீரென அறுந்த விழுந்தது. இதில் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நிலைதடுமாறி தடுமாறி கீழே விழுந்தாா். உடனடியாக அங்கிருந்த காவலா்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் அமைச்சா் கைதாங்கலாக தூக்கிவிட்டனா். இந்த காட்சி அங்கிருந்தவா்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னா் விழாவில் உரையாற்றிய அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், இது நான் படித்த பள்ளி. இந்த மைதானத்தில் உருண்டு புரண்டு விளையாடியிருக்கிறேன். இன்றும் அதே மண்ணில் விழுந்தது எனக்கு அவமானம் அல்ல. இந்த பள்ளி வளாகத்தின் மண் மீண்டும் என்னைத் தொட்டது உணா்ச்சிபூா்வமான தருணமாக கருதுவதாக தெரிவித்தாா்.

பட விளக்கம்: சேலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கயிறு இழுக்கும் போட்டியின் போது, திடீரென கயிறு அறுந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.