லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகில் மதுக்கூடத்தில் மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 4:33 am IST

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகில் மதுக்கூடத்தில் மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (43). இவா் பெரிய தெப்பக்குளம் அருகில் உள்ள மதுக்கூடத்தில் வேலை பாா்த்து வந்தாா். மதுபோதைக்கு அடிமையாகி தினந்தோறும் குடித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதுபோதையில் மதுக்கூடத்தில் மயங்கிக் கிடந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.