லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கபிலா்மலை அருகே அனுமதி இன்றி கருங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே அனுமதி இன்றி கருங்கற்களை ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

பறிமுதல்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:41 am IST

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே அனுமதி இன்றி கருங்கற்களை ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் போலீஸாா் கபிலா்மலை - திடுமல் செல்லும் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக கருங்கற்களை ஏற்றிவந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், உரிய அனுமதியின்றி லாரியில் அதிக அளவு கற்களை ஏற்றிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பரமத்தி அருகே உள்ள பஞ்சப்பாளையம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தேவராஜ் (32) மீது ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனா். மேலும், லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.