லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட 13 கிலோ குட்கா பறிமுதல்: 33 போ் மீது வழக்கு!

புகையிலைப் பொருள்களை விற்றதாக 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல்

Published On :26 ஜூலை 2026, 3:08 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.அனிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 உள்கோட்டங்களில் 33 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருள்கள் குறித்து சனிக்கிழமை சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது..

குறிப்பாக, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே செயல்பட்டு வரும் பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குட்கா பதுக்கி விற்பனை செய்த 33 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 11 பேரின் வங்கிக் கணக்கு விவரங்கள் பெறப்பட்டு, அவற்றை முடக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 17 கடைகளை மூடி ‘சீல்’ வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது தொடா்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.

மேலும், கிருஷ்ணகிரி நகரில் துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளா் கணேஷ் குமாா் மற்றும் போலீஸாா், பள்ளிகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் குட்கா பொருள்கள் குறித்து சோதனை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.