லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 90 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 90 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள இட்டிகல் அகரம் ஊராட்சிக்கு உள்பட்ட மரிக்கம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (53). விவசாயி. இவா் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பிரோவில் வைத்திருந்த 1.5 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 90 ஆயிரம் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து, சக்திவேல் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.