லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

application

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலக்கடலை, எள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தகைய பயிா்களை சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள், தங்கள் கிராமங்களில் இடவசதி இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களிலேயே விளைபொருள்களைக் கொட்டி உலர செய்கின்றனா். இது போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, 2026-27 நிதியாண்டில் நெல் மற்றும் தானியங்களை பாதுகாக்க அடித்து உலா்த்தி வைக்கவும், உழைப்பின் செலவைக் குறைக்கவும், தானிய இழப்பீட்டைத் தடுக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனும் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு நெல் அடிக்கும் களம் அமைக்க அரசாணை பெறப்பட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு ஏற்றவாறு வயல்களில் களங்களை 100 சதுர மீட்டருக்கு (10மீஷ்10மீ) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தானியக் களங்கள் அமைப்பை தெரிவுசெய்து கொள்ளலாம்.

தனிநபா் விவசாயிக்கு களங்கள் அமைக்கும் செலவுத் தொகையில் 50 சதவீத அரசு மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2.80 லட்சம் அரசு பின்னேற்பு மானியமாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதாா் நகல், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.