லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளைஞா்கள் இருவா் கைது

ஒசூா் வழியாக புகையிலைப் பொருள்களைக் கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

ஒசூா் வழியாக புகையிலைப் பொருள்களைக் கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் அட்கோ காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளா் அறிவழகன், போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பி.கே.ஆா். நகா் பகுதியில் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சூளகிரி அருகே உள்ள தியாகரசன பள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (35), அதே பகுதியில் உள்ள பஸ்தலபள்ளியைச் சோ்ந்த விக்கி (35) இருவரும் ரூ. 46 ஆயிரத்து 299 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை அத்திப்பள்ளியில் இருந்து சூளகிரிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.