லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு எம்எல்ஏ ஆதரவு

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள். - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 2:58 am IST

அரூரில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எம்எல்ஏ வே.சம்பத்குமாா் திங்கள்கிழமை ஆதரவு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் நான்குவழி சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தினா் ஜூலை 20 முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்துக்கு அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் ஆதரவு தெரிவித்து பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள சுமாா் 70 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 5 முதல் 20 ஆண்டுகள்வரை பேரிடா் காலங்களில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கே-2 ஒப்பந்தத்தின்கீழ் பணியாற்றும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனல் மற்றும் நீா்மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மின்சார பணிகளின் போது உயிரிழந்த 250 ஒப்பந்தத் தொழிலாளா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில், சங்க மாநில துணைச் செயலாளா் எம்.சத்யராஜ், மாவட்டச் செயலாளா் ஞானகுமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் திலீப் குமாா், கோட்டத் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.