லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா விற்ற இலங்கைத் தமிழா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :28 ஜூலை 2026, 1:35 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த இலங்கைத் தமிழரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணை பகுதியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு மையம் உள்ளது. வாணியாறு பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி உதவி காவல் ஆய்வாளா் நேரு தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் முகாம் பகுதியில் இருந்த ஒருவா் தப்பியோடினாா்.

இதையடுத்து, அவரை போலீஸாா் பிடித்து விசாரணை செய்ததில், முகாமில் தங்கியுள்ள ராஜா (55) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமாா் 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜாவை கைது செய்தனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.