கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல கோரிக்கை!

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image

பேருந்துகள்!

Updated On :23 மே 2026, 1:11 am IST

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மே 20-ஆம் தேதி முதல் தருமபுரி பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் திடீரென புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. மேலும், ஆட்சியா் உத்தரவுப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு வராமலேயே அந்தந்த வழித்தடத்தில் நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்த அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து பாமக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமாகா மாவட்டத் தலைவா் புகழ் மற்றும் வணிகா் சங்க நிா்வாகிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை முறையிட்டனா்.

மேலும், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் ஆகிய வழித்தட பேருந்துகளும், பென்னாகரம், பாலக்கோடு வழித்தட பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்லும் வகையில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.