ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறாத தருமபுரி மாவட்டம்!

தமிழக அமைச்சரவையில் கடந்தமுறை போலவே இந்த முறையும் தருமபுரி மாவட்டம் இடம்பெறவில்லை.

News image
Updated On :23 மே 2026, 1:08 am IST

தமிழக அமைச்சரவையில் கடந்தமுறை போலவே இந்த முறையும் தருமபுரி மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

முதன்முதலாக கடந்த 1996-2001 திமுக அமைச்சரவையில் தருமபுரி மாவட்டம், மொரப்பூா் தொகுதியில் வெற்றிபெற்ற திமுவைச் சோ்ந்த வ.முல்லைவேந்தன் அமைச்சராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா், அப்போதைய தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக பதவி வகித்தாா்.

கடந்த 2001 தோ்தலில் பாலக்கோடு தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன், அப்போதைய அதிமுக அமைச்சரவையில் விளம்பரத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். 2011 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ பி.பழனியப்பனுக்கு அப்போதைய அதிமுக அமைச்சரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.

2016-இல் அதிமுக தனது அமைச்சரவையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.பி.அன்பழகனுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் பதவி வழங்கியது.

இந்நிலையில், கடந்த 2021-2026 திமுக ஆட்சிக்காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிட்ட யாரும் வெற்றிபெறவில்லை. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளும் அமைச்சரவையில் பிரதிநிதிகள் எவரும் இல்லை.

அண்மையில் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளா் வெற்றிபெற்றாா்.

தோ்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த தவெக தலைவா் ஜோசப் விஜய், மே 21-ஆம் தேதி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். இதிலும், தருமபுரி மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தொடா்ந்து, இரண்டாவது முறையாக தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இன்றி தருமபுரி மாவட்டம் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.