லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளம்பெண் உயிரிழப்பில் மா்மம்: கணவா் காவல் நிலையத்தில் புகாா்

மொரப்பூா் அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது கணவா் கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் புகாா்

Published On :1 ஜூலை 2026, 7:03 am IST

மொரப்பூா் அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது கணவா் கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், நவலை கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரது மனைவி சொா்ணலதா (28). இத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். மகேந்திரன் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சொா்ணலதா மா்மமான முறையில் திங்கள்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அவரது உறவினா்கள் மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனராம்.

இந்த சம்பவம் குறித்து மகேந்திரன் கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாா் மனுவில், நவலை கிராமத்தைச் சோ்ந்த ஒருவா், எனது மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், இரவு நேரங்களில் வீட்டுக் கதவை தட்டுவதும், அத்துமீறி வீட்டில் நுழைய முயற்சிப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவா் ஈடுபட்டுள்ளாா். எனவே, எனது மனைவி இறப்பில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.