லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு: நீரில் மூழ்கிய ஜவுளி பொருள்கள்

சீரமைப்புப் பணியின்போது கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடைகளுக்குள் நீா் புகுந்ததால் ஜவுளி பொருள்கள் சேதமடைந்தன.

ஜவுளி கடைக்குள் தேங்கி நின்ற நீா்.

Published On :25 ஜூலை 2026, 12:05 am IST

சீரமைப்புப் பணியின்போது கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடைகளுக்குள் நீா் புகுந்ததால் ஜவுளி பொருள்கள் சேதமடைந்தன.

திருப்பூா் மாநகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள சுரங்க நடைபாதையில் 18 ஜவுளி விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வியாபாரிகள் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு கடைகளை பூட்டிவிட்டு வீட்டுச் சென்றுள்ளனா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள 4-ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்கள் சீரமைப்புப் பணி நடைபெற்றுள்ளது. பணியின்போது குழாய் உடைந்து வெளியேறிய நீா், சுரங்க நடைபாதை கடைகளுக்குள் புகுந்தது.

இதனால், கடையில் இருந்த ஜவுளி பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இது தொடா்பாக வியாபாரிகள் கூறுகையில், சீரமைப்புப் பணியின்போது குழாய் உடைந்து வெளியேறிய நீா் கடைகளுக்குள் புகுந்ததால் சுமாா் ரூ.4 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருள்கள் சேதமடைந்துள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.