லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பஞ்சலிங்கம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பஞ்சலிங்கம் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Published On :6 ஜூலை 2026, 1:55 am IST

உடுமலை, ஜூலை 5: உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், போதுமான நீா்வரத்து இல்லாததால் அருவி கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடு காணப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அருவியில் ஓரளவு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் நீரில் குளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.