லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வயநாடு மாவட்டத்தில் கால்நடைகளைக் கொன்ற புலி சிக்கியது

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பொன்குழி பகுதியில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி, வனத் துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.

கூண்டில் சிக்கிய புலி.

Published On :25 ஜூன் 2026, 3:17 am IST

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பொன்குழி பகுதியில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி, வனத் துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி வனச் சரகத்துக்குள்பட்ட பொன்குழி சிறமூலா கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புப் பகுதிக்குள் புலி நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. கால்நடைகளை தாக்கிக் கொல்லும் புலியைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து புலியைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் கடந்த 21-ஆம் தேதி கூண்டு வைத்து வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் அந்த புலி, வனத் துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை அதிகாலை சிக்கியது. இதையறிந்து அங்கு வந்த வனத் துறையினா், கால்நடை மருத்துவக் குழு மூலமாக புலியைப் பரிசோதிப்பதற்காக குப்பாடியிலுள்ள விலங்குகள் நல மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.