லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடியிருப்புப் பகுதியில் பூச்சிகள் தொல்லை: கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

குன்னூா் சேலாஸ் பகுதியில் குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் பரவி வந்த சிறிய வகை பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை மற்றும் உலிக்கல் பேருராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலாஸ் பகுதியில் பூச்சி பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்.

Published On :25 ஜூலை 2026, 12:03 am IST

குன்னூா்  சேலாஸ் பகுதியில் குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் பரவி வந்த சிறிய வகை பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை மற்றும் உலிக்கல் பேருராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அரவேணு பகுதியில் கடந்த சில நாள்களாக கடைகள் மற்றும் வீடுகளில் ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான பூச்சிகள்  காணப்பட்டன. இதைத் தொடா்ந்து குன்னூா் உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட சேலாஸ் பகுதியிலும் ஆயிரக்கணக்கான இந்த சிறிய வகை பூச்சிகள் தொல்லை அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா். பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், சுகாதாரத் துறையினா் மற்றும் உலிக்கல் பேருராட்சி நிா்வாகத்தினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் இப்பகுதிகளில் மருந்துகள் அடித்து பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.