லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோபி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: பெயிண்டா் கைது

கோபி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்க பெயிண்டிங் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 3:08 am IST

கோபி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்க பெயிண்டிங் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் பள்ளி சிறுமி கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

அப்போது அங்கு பெயிண்டிங் வேலைக்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி, சிறுமி இருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியின் வாயை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து வெளியே சென்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளாா். இதனால் இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்காமல் மறைத்துள்ளாா். இந்நிலையில், சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை கண்டு சந்தேகமடைந்த அவரது தாய் விசாரித்தபோது, நடந்தவற்றை சிறுமி தெரிவித்துள்ளாா்.

உடனடியாக சிறுமியை கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி 5 மாதம் கா்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனா். இதுகுறித்து குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை நடத்தி சிறுமியின் பெற்றோருடன் கோபி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்து, ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.